திருக்கனூர் : திருக்கனூர் அருகே உள்ள கைக்கிளப்பட்டு- சுத்துக்கேணி கிராமங்களுக்கு இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே படுகை அணையுடன் கூடிய மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறப்பு விழா காணாமல் இருந்தது. ஆகையால் பாலத்தை பொதுமக்கள் தாங்களாகவே பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.
மேலும், பாலத்தில் இரவு நேரங்களில் எரியும் மின்விளக்குகளில் சில மின்விளக்குகள் எரியாமல் பழுது ஏற்பட்டுள்ளது. பாலத்தை இணைக்கும் இடங்களில் உள்ள சாலைகள் சேதம் அடைந்துள்ளன. எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக இதிலுள்ள குறைபாடுகளை நீக்கி முழுமையாக திறப்பு விழா செய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.