×

சென்னை பாரிமுனையில் திமுக பிரமுகர் கொலை வழக்கு; 5 பேர் கைது: வழக்கறிஞர் சதீஸ்குமாரிடம் போலீசார் விசாரணை

சென்னை: சென்னை பாரிமுனையில் திமுக பிரமுகர் சவுந்தராஜன் கொலை வழக்கில் வழக்கறிஞர் சதீஸ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டில் நேற்று கைதான வழக்கறிஞர் சதீஸ்குமாரை எஸ்பிளனேடு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலை வழக்கில் அதிமுகவை சேர்ந்த கணேசன், தினேஷ்குமார், கார்த்திக், குமரேசன், இன்பா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை பாரிமுனையில் திமுக பிரமுகர் சௌந்தரராஜன் வெட்டி கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடைபெற்ற சம்பவவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்ட சவுந்தரராஜன் சென்னை வியாசர்பாடியில் 59-வது வட்ட கழக செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் கொலையாளிகள் ஆட்டோவில் தப்பி சென்ற காட்சி பதிவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தண்ணீர் பந்தல் அமைப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலே கொலை செய்யப்பட்டதாக காரணம் என கூறப்படுகிறது. மேலும் இந்த கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 4 பேர் நேற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

மேலும் அவர் பிராட்வே பேருந்து நிலையத்தில் இதற்கு முன்பாக அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்திருந்தார் என கூறப்படுகிறது. அப்போது சவுந்தரராஜன் அதிமுகவில் இருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து விலகி திமுகவில் இணைந்த பிறகு திமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்துள்ளார். இதனால் அதிமுக பிரமுகர் கணேஷனுக்கும், சவுந்தரராஜனுக்கும் மோதல் இருந்து வந்த நிலையில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது என முதற்கட்ட விசாரணயைில் தெரிவிய வந்துள்ளது.

Tags : DMK ,Chennai ,Satheeskumar , Barimuna, DMK official, murder, lawyer, investigation
× RELATED கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை...