×

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குளோரைட் தொழிற்சாலையில் தீ விபத்து : 4,000 டன் மூலப்பொருட்கள் எரிந்து சேதம்

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே முருகமலை பகுதியில் குளோரைட் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. 10 மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 4,000 டன் அளவிலான மூலப்பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய தயாராக இருந்த மூலப்பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது.

இதேபோல் கடந்த மார்ச் 30-ம் தேதி பெரியகுளம் அருகே, தென்னை நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே முருகமலை பகுதியில், தனியாருக்கு சொந்தமான தென்னை நார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் தென்னை நார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சிறிது நேரத்தில் தீ மள, மளவென பரவி அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த தென்னை நார் குவியலில் பற்றிக்கொண்டது. ஒரே வாரத்தில் ஒரே கிராமத்தில் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


Tags : Theni district ,Belyakulam , Theni, Periyakulam, Chloride Factory, Fire
× RELATED கோம்பை பகுதியில் வாகன...