திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சாதுக்கள் வசித்து வருகின்றனர். கிரிவலப்பாதையில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெறுவதாகவும், கஞ்சா போதையில் சில சாதுக்கள் தகராறில் ஈடுபடுவது, கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்துவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்பி பவன்குமார், கிரிவலப்பாதையில் போலீசார் ரோந்து செல்லவும், புதிதாக போலீஸ் ரோந்து வாகனமும் இயக்கி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கிரிவலப்பாதையில் ஏஎஸ்பி கிரண்சுருதி தலைமையில் இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, வாயுலிங்கம் அருகே இருந்த சாது ஒருவரது பையை சந்தேகத்தின்பேரில் சோதனையிட்டனர். அதில் விற்பனைக்காக அரை கிலோ கஞ்சா பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர், தூத்துக்குடி அடுத்த மேலூர் பகுதியை சேர்ந்த பாக்கியநாதன்(52) என்பதும், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பல மாதங்களாக வசித்து வருவதும் ெதரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.