×

கோடை காலத்தை சமாளிக்க மக்களுக்கு குடிநீர், மோர் இளநீர் வழங்க வேண்டும்: தேமுதிகவினருக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்கள் கோடை காலத்தை சமாளிப்பதற்கு தேமுதிக சார்பில் உதவிகளை செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, வட்டம், ஊராட்சி ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைத்து அதில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்றவைகளை பொது மக்களுக்கு வழங்கி, அவர்களின் தாகத்தை தணிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இந்த சீரிய பணிக்கு என்றும்போல் எனது இதயமார்ந்த வாழ்த்துகள் உண்டு. இக்கோடைகாலம் முழுவதும் இப்பணியினை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vijayakanth ,Temujin , Provide drinking water and buttermilk to the people to cope with the summer: Vijayakanth appeals to Temujin
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...