மதுரை: நெல்லை நம்பியாறு ஆற்றுப்படுகையில் தாது மணலை கடத்தி சட்டவிரோதமான பதுக்கி வைத்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் சிபிசிஐடி மற்றும் சிபிஐ பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திசையன்விளையைச் சேர்ந்த குமரேசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு மீது உத்தரவிடப்பட்டுள்ளது.