சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே எருமைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மா ஊரணி உள்ளது. 50 ஏக்கர் பரப்பிலான இந்த ஊரணியில் குத்தகைதாரர்கள் மீன்பிடி சாதனமான மூங்கிலால் செய்யப்பட்ட ஊத்தாவை கொண்டு மீன் பிடிக்க 200 வீதம் வசூல் செய்யப்பட்து. இந்த மீன்பிடித் திருவிழாவில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் வந்து கலந்து கொண்டனர். இதில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர்.
கண்மாயில் மீன் இல்லாததால் ஊத்தாவிற்கு பணம் கட்டியவர்கள் கண்மாய் குத்தகை எடுத்தவரிடம் பணத்தை திரும்ப கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து எஸ்.எஸ் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கூட்டத்தை கலைந்து போகச் செய்தனர். இதனால் மீன்பிடிக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டது.