×

நெல்லூர் அருகே திடீர் நிலநடுக்கம்: 3.6 ரிக்டர் பதிவானது

திருமலை: ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், மனபோலு மண்டலம், ஜெட்லகுண்டூரு கிராமத்தில் நேற்று அதிகாலை 1.10 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் வீட்டில் இருந்த பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் உருண்டது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கிராம மக்கள் தங்களது குழந்தைகள், வயதானவர்களுடன் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர். இரவு முழுவதும் பீதியிலேயே வெளியே காத்திருந்த அவர்கள், நிலைமை சீரானதும் நேற்று காலை தங்களது வீடுகளுக்கு திரும்பினர். திருப்பதியில் இருந்து சுமார் 85 கி.மீ. தொலைவில் பூமிக்கு அடியில் 20 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவானதாகவும் தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Nellore , 3.6 magnitude earthquake shakes Nellore
× RELATED லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு.!!