×

உடல்நலம் குறித்து விசாரிப்பு முதல்வருக்கு சீமான் நன்றி

சென்னை: தனது உடல் நலம் குறித்த விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முன்தினம் திருவொற்றியூர் பகுதியில் போராட்டத்தில் கலந்து கொண்டார். அந்த போராட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த, அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினர் சீமானை உடனடியாக அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். சீமானின் உடல் நலம் குறித்து அரசியல் கட்சியினர் சீமானிடம் நலம் விசாரித்து நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சீமானை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், எனது உடல் நலம் குறித்து அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலினுக்கு எனது நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Tags : Seiman ,Chief of Inquiry on Health , Seaman thanks Chief of Health Inquiry
× RELATED 3வது இடத்துக்கு சீமானுடன்தான் போட்டி...