×

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் - லாரி மோதி விபத்து: 8 வயது சிறுவன் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் அடுத்த சிறுவாச்சூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 8 வயது சிறுவன் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் மதியம் 2 மணி அளவில் பெரம்பலூர் அடுத்த சிறுவாச்சூர் அருகே ஒரு பிரிவுச் சாலை உள்ளது. அந்த வளைவில் கார் திரும்பும் பொது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த லாரி கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கார் உருக்குலைந்து காணப்படுகிறது. இந்த காரில் பயணம் செய்த 9 பேரில் 8 வயது சிறுவன் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 2 சிறுவர்கள், பலத்த காயங்களுடன் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமயபுரம் கோவிலுக்கு சென்று திரும்பிய போது விபத்து நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பெரம்பலூர் எஸ்.பி. சம்பவ இடத்திற்கு விரைந்தார். தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


Tags : Trichy National Highway - ,Larry , Car-truck collision on Trichy National Highway: Four people, including an 8-year-old boy, died on the spot
× RELATED வானில் திரண்ட கருமேக கூட்டம் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி கார் மோதி பலி