×

‘’விட்டுவிடுங்கள் மாமா’’என்று கெஞ்சியபோதும் விடவில்லை; நண்பர்களுடன் சேர்ந்து சிறுமி பலாத்காரம்; மர்ம உறுப்பில் மிளகாய் பொடி தூவி ரசிப்பு: கொடூர தாய்மாமன் பகீர் தகவல்கள்

தண்டையார்பேட்டை: ‘’விட்டுவிடுங்கள் மாமா’’ என்று கெஞ்சியபோதும் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தேன். மனைவியுடன் சேர்ந்து சிறுமியின் மர்ம உறுப்பில் மிளகாய்பொடி தூவி ரசித்தேன் என்று குரூர புத்திக்கொண்ட தாய்மாமன் திடுக்கிடும் தகவல்கள் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு கடந்த 2000ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதன்பிறகு சில ஆண்டுகளில் குழந்தையின் தந்தை இறந்துவிட்டார். இந்த நிலையில், குழந்தையின் தாயின் சகோதரர் தேசப்பனுக்கு திருமணமாகி குழந்தை இல்லை.

இதனால் கடந்த 2009ம் ஆண்டு தாய் தனது மகளை சகோதரர் பொறுப்பில் விட்டுவிட்டு, அவர் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். இதன்பிறகு தாய், தனது குழந்தையை பார்க்க வருவது கிடையாது என்று தெரிகிறது. இந்த நிலையில், தனது சகோதரி மகள் என்றுகூட பார்க்காமல் அவருக்கு தேசப்பன் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். 13 வயதில் பருவம் அடைந்த பின்னரும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அத்துடன் தனது நண்பர்களான சிவா, சீனிவாசன், ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்தும் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவுகளை கொடுத்துள்ளார்.

இதுதவிர தனது நண்பர்கள், தெரிந்தவர்களுக்கும் சிறுமியை கட்டாயப்படுத்தி அனுப்பிவைத்தாக கூறப்படுகிறது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமி, ‘’ தனது தாய்மாமனிடம் தன்னை விட்டுவிடுங்கள் மாமா, என்னால் தாங்க முடியவில்லை’’ என்று கெஞ்சி கதறியுள்ளார். இதுபோல் பலமுறை மாமாவிடமும் அவரது மனைவியும் அத்தையுமான ரேவதியிடமும் கையெடுத்து கும்பிட்டு கதறியுள்ளார். இருப்பினும் அவர்களது கல் நெஞ்சில் ஈரம் சுரக்கவில்லை.

இதனிடையே தொந்தரவின் உச்சக்கட்டமாக சிறுமியின் மர்ம உறுப்பில் மிளகாய் பொடியை தூவியதுடன் சிறுமி துன்பப்படுவதை கண்டு ரசித்துள்ளனர். அத்துடன் அவற்றை செல்போனில் வீடியோவும் எடுத்துவைத்துள்ளனர்.  இதன்பிறகு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை  வீடியோ எடுத்து தான் சொல்கிற படி நடக்கவேண்டும் என ரேவதி தொடர்ந்து மிரட்டியுள்ளார். இந்த கொடுமைகள் எல்லாம் சிறுமியின் தாய்க்கு தெரியவந்தபிறகும் அவர் கண்டுகொள்ளாமல் இருந்ததாக தெரிகிறது. இவ்வாறாக கடந்த 2020ம் ஆண்டு வரை சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

எப்படியோ கடந்த 2020ம் ஆண்டு தாய்மாமன் தேசப்பன் பிடியில் இருந்து தப்பிய சிறுமி, பிராட்வே பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்துள்ளார்.  இதை பார்த்த சமூகநல ஆர்வலர்கள், குழந்தைள் நல அலுவலர் மூலம் சிறுமியை மீட்டு பெரவள்ளூர் தனியார் காப்பகத்தில் தங்கவைத்துள்ளனர். அப்போது சிறுமி, தனது 9 வயது முதல் பருவம் அடைந்ததுவரை நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து  குழந்தைகள் நல உறுப்பினர்  பாத்திமா, பிரசன்னா, அலெக்சாண்டர், ஜோஸ்மின் ஆகியோரிடம் விளக்கமாக கூறியுள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

சமீபத்தில் சென்னை மாவட்ட குழந்தைகள் நல  உறுப்பினர் லலிதாவுக்கு இந்த விவகாரம் தெரியவந்துள்ளது. இதன்படி, ராயபுரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டப்பிரிவுகள், இந்திய தண்டனை சட்ட பிரிவு- கொலை மிரட்டல், 312- கருவை சிதைத்தல்  ஆகிய பிரிவுகளின் கீழ் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் தாய், தாய் மாமன், அவரது மனைவி ரேவதி மற்றும் குழந்தைகள் நல குழு உறுப்பினராக இருந்தவரும் தனியார் காப்பக நிர்வாகியுமான  இசபெல் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்ததால் அவர்கள் அனைவரையும் நேற்று சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான தேசப்பனை கேரளாவில் நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்துவந்து தீவிர விசாரணை நடத்தியதில்தான் மேற்கண்ட திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த நிலையில், சிறுமி பாலியல் கொடுமை வழக்கில் மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர். இதுசம்பந்தமாக காப்பக ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : Pakir , ‘‘ Leave, uncle, ’’ he begged, not giving up; Girl raped with friends; Sprinkle chilli powder on the mysterious organ and enjoy: Information from the cruel mother Pakir
× RELATED இந்தியாவில் இருந்தே நியூசி.க்கு மிரட்டல்: பாக். அமைச்சர் பகீர் புகார்