×

திருவேற்காட்டில் கஞ்சா விற்ற 4 பேர் கைது: 1.5 கிலோ பறிமுதல்

பூந்தமல்லி: தமிழக போலீசார் கஞ்சாவை ஒழிக்க தீவிரவேட்டை நடத்தி வருகின்றனர். அதன்படி திருவேற்காடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்தனர். அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. விசாரணையில் திருவேற்காட்டைச் சேர்ந்த அன்புச்செல்வன் (18). அஜித்குமார் (20) என தெரியவந்தது. அவர்கள் கரையான்சாவடி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (25) என்பவரிடம் கஞ்சா வாங்கியதாக தெரிவித்தனர்.

அவர்கள் அளித்த தகவலின்பேரில் போலீசார் ராஜேஸ்குமார் மற்றும் அவனது கூட்டாளி ரியாஸ் (22) என்பவரையும் கைது செய்தனர். வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சா பைக்கையும் பறிமுதல் செய்தனர். இருவரையும் காவல் நிலையம் கொண்டு வந்தனர். கஞ்சாவை திருவேற்காடு, வேலப்பன்சாவடி, குமனன்சாவடி, கரையன்சாவடி, மாங்காடு மற்றும் பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில்  விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.







Tags : Thiruverkot , பூந்தமல்லிFour arrested for selling cannabis in Thiruverkot
× RELATED திருவேற்காட்டில் கலைநிகழ்ச்சிகள்...