×

துளித்துளியாய்.....

* ஐபிஎல் போட்டிகளுக்கான பார்வையாளர் எண்ணிக்கை, ஏப்ரல் 6ம் தேதி முதல் 50 சதவீதமாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* ‘அஷ்வின், போல்ட், பிரசித் என முக்கிய  பந்துவீச்சாளர்கள் அணிக்கு பெரிய நம்பிக்கையும், உத்வேகத்தையும் தருகிறார்கள்’  என ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்கக்கரா தெரிவித்துள்ளார்.
* ‘நாளை நடைபெற உள்ள மகளிர் உலக கோப்பை பைனலில் ஆஸ்திரேலியாவை எங்களால் வீழ்த்த முடியும்’ என்று இங்கிலாந்து அணியின் வீராங்கனை ஷோபி எக்லஸ்டோன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
* ‘ஒவ்வொரு சீசனிலும் மும்பை அணி தொடக்கத்தில் சற்று தடுமாறுவது வாடிக்கை தான். இன்னும் நாட்கள் இருக்கின்றன. அதுமட்டுமல்ல மும்பையின்  முதல் ஆட்டம் எப்படி இருக்கும் என்ற வரலாறும் இருக்கிறது’ என்று மும்பை இந்தியன்ஸ் இயக்குநர் ஜாகீர் கான் கூறியுள்ளார்.
* ஆப்ரிக்காவில்  இருந்து ஃபிபா உலக கோப்பைக்கு நைஜீரியா தகுதி பெறாததை அடுத்து அதன் பயிற்சியாளர்  அகஸ்டின்  எகுவாவோன் பதவி விலகியுள்ளார்.
* எப்ஐஎச் ஹாக்கி புரோ லீக்கில் நாளை இந்தியா - இங்கிலாந்து ஆண்கள் அணிகள் மோதுகின்றன. அதில் வென்றால்  16 புள்ளிகளுடன் இருக்கும்  இந்தியா முதல் இடத்துக்கு முன்னேறும். தற்போது ஜெர்மனி 17 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.  டிராவில் முடிந்தாலும் கோல் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா முதல் இடத்தை எட்டும்.

Tags : துளித்துளியாய் .....
× RELATED துளித்துளியாய்....