×

திருத்தணி அடுத்த புனிமங்காடு கிராமத்தில் அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து இரண்டு சிறுவர்கள் காயம்

திருத்தணி: திருத்தணி அடுத்த புனிமங்காடு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர்.  திருத்தணி அடுத்த புனிமங்காடு கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அதில் மேற்கூரை  இடிந்து விழுந்ததில் விமல்ராஜ், தினா என்ற சிறுவனுக்கு படுகாயம்  அடைந்தனர்.  அங்கன்வாடி மையத்தில் 35 குழந்தைகள்  உள்ளன. 18 ஆண் குழந்தைகளும் 17 பெண் குழந்தைகளும் உள்ளன. மற்ற குழந்தைகள் தண்ணீர் குடிப்பதற்காக வெளியே சென்ற பொது அங்கன்வாடி மையத்திற்குள் இருந்த விமலராஜ் , தினா மீது  மேற்கூரை  இடிந்து விழுந்தது.  

இதில் விமல்ராஜ் -கு, தலை, தாடை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. அதை போல்  தீனா-க்கு கையில் காயம்  ஏற்பட்டது. உடனடியாக புனிமாங்காடு  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டு சென்று முதலுதவி அளிக்கப்பட்டது தற்போது மேல் சிகிச்சைகாக திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் அளிக்கபட்டுள்ளது.


Tags : Anganwadi Center ,Punimangadu ,Thiruthani , Anganwadi, the roof of the center collapsed, injuring two boys
× RELATED வாலாஜாபாத் ஒன்றியம் அகரம் காலனியில்...