சென்னை: பெண் கவுன்சிலர்கள் பணிகளில் அவர்களது கணவர்கள் தலையிட்டால் அல்லது அத்துமீறினால் தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை மாநகராட்சியில் தெருவிளக்கு இல்லாத பகுதிகளில் தெருவிளக்கு அமைக்க 69கோடி ரூபாயும், பொது இடங்களில் இலவச கழிப்பறைகள் அமைக்க 33 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.