தூத்துக்குடி: மூலப்பொருள்களின் விலை உயர்வை கண்டித்து வரும் 6-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தீப்பெட்டி தொழிற்சாலைகள் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டடுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, வேலூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி செய்யும் தொழில் நடைபெற்று வருகிறது. மாநில முழுவதும் 300கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் உட்பட நேரடியாகவும் மறைமுகமாகவும் 4 லட்சம் தொழிலாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டடுள்ளனர். இந்நிலையில் மூலப்பொருள்களின் விலை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு இருப்பதால் தீப்பெட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது தீப்பெட்டி உற்பத்தி இருந்தாலும் போதிய விலை கிடைக்கவில்லை என்பதால் வரும் 6-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்த தொழிற்சாலைகள் முடிவு செய்துள்ளன.
600 தீப்பெட்டி கொண்ட பண்டலின் விலை 300 ரூபாயில் இருந்து 350ஆக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது .சீனாவில் இருந்து லைட்டரால் தீப்பெட்டி விற்பனை 30சதவீதம் பாதிக்கப்படுவதாகவும் அதற்கு ஒன்றிய அரசு தடை விதிக்க வேண்டும் என சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டடுள்ளது. தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் போராட்டத்தால் நாளொன்றுக்கு 6 கோடி ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படும் என்பதால் அந்த தொழிலை நம்பியுள்ள 4 லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது என கூறப்படுகிறது.