ஷில்லாங்: மேகாலயா மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் எம் கார்கோங்கோர் தாக்கல் செய்த பொதுநலன் வழக்கை விசாரித்த, மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி டபுள்யூ டீங்டோ ஆகியோர் அடங்கிய டிவிஷன் அமர்வு பிறப்பித்த உத்தரவில், ராணுவ வாகனங்களில் அதிகாரிகள் உடந்தையுடன் கைதிகள் போதை பொருட்கள் எடுத்து செல்வதாக கூறப்படுவதால், ராணுவ வாகனங்களில் திடீர் சோதனை நடத்த வேண்டும். இதுபோன்ற குற்றச்சாட்டு நம்ப முடியாததாக இருந்தாலும், அவை பொதுவாக சோதனையில் இருந்து பாதுகாக்கப்படுகின்றன’ என்று தெரிவித்துள்ளனர்.