திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உ.வடிவேலுவை தமிழக பால்வளத்துறை அமைச்சரும், மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்து இருக்கையில் அமர வைத்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் கி.ரவி அனைவரையும் வரவேற்றார். திமுக பேரூர் செயலாளர் தி.வே.முனுசாமி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெ.மகாதேவன், கவுன்சிலர்கள் மஞ்சுளா பாஸ்கர், விஜயலட்சுமி வேலு, கஸ்தூரி அருள், ஜிவா சதீஷ், அனிதா சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் சி.ஜெரால்டு, கே.ஜெ.ரமேஷ், ப.ச.கமலேஷ், பரமேஸ்வரி கந்தன், ஏ.ஜெ.ரவி, ஜி.எஸ்.சங்கீதாசீனிவசன், எம்.முத்தமிழ்ச் செல்வன், ஏ.ஜனார்த்தனன், கருணாநிதி, வி.எம்நாகதாஸ், தி.கொ.செல்வம், சண்முகம், கங்காதரன், கருணாகரன், இளங்கோவன், நாகராஜ், மோகன், ஜான் மேத்யூ, எழிலரசன், எம்.சுரேந்தர், எம்.சங்கர், வேலு, டி.துரைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.