×

பங்குனி பிரம்மோற்சவ விழாவையொட்டி ஸ்ரீயதோக்தகாரி பெருமாள் திருத்தேர் பவனி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஸ்ரீயதோக்தகாரி பெருமாள் கோயில் பங்குனி பிரம்மோற்சவ விழாவையொட்டி, திருத்தேரில் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 108 திவ்ய தேசத்தில் ஒன்றான காஞ்சி ஸ்ரீகோமளவல்லி தாயார் சமேத ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோயில் பங்குனி பிரம்மோற்சவம் விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 7ம் நாளான நேற்று ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள், திருத்தேரில் எழுந்தருளி, டி.கே. நம்பி தெரு, செட்டித்தெரு வழியாக ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு உற்சவருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். வழியெங்கும் அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா நல்லப்பா நாராயணன் குழுவினர் செய்தனர்.

Tags : Perumal Thiruther Bhavani ,Panguni Prom , Sriyadokthakari Perumal Thiruther Bhavani on the occasion of Panguni Prom
× RELATED மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கக் கோரிய...