×

வெயிலில் வெறும் காலில் நடந்து வந்த மூதாட்டிக்கு காலணி வாங்கி கொடுத்த போலீஸ் ஏட்டு: தாம்பரம் கமிஷனர் பாராட்டு

துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர் சந்திப்பில் கடந்த 28ம் தேதி பணியில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் ஜான்சன் புருஸ்லீ என்பவர் அவ்வழியே கடும் வெயிலில் நடந்து வந்த வயதான மூதாட்டியை பார்த்துள்ளார். அப்போது, மூதாட்டி வெயிலின் தாக்கத்தினால் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டிருந்த இடத்தில் சிறிது நேரம் இளைப்பாற அமர்ந்துள்ளார். போக்குவரத்து போலீசார் மூதாட்டியை பார்த்ததும் கையில் இருந்த ₹20 ரூபாயை கொடுத்துள்ளார். பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்த மூதாட்டி வெயில் அதிகமாக உள்ளது. கால் சுடுவதாக கூறியுள்ளார். இதை கேட்ட போக்குவரத்து தலைமை காவலர் சிறிது நேரத்தில் ஒருவரை அனுப்பி காலணி வாங்கி வந்து மூதாட்டிக்கு அணிவித்து அனுப்பி வைத்தார்.

மூதாட்டியோ இரு கைகூப்பி வணங்கி சென்றார். அப்போது, `எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள். இங்குள்ள இரண்டு சிக்னலில் தான் இருப்பேன்’ என மூதாட்டியிடம் அவர் கூறியுள்ளார். இந்த செய்தியறிந்த தாம்பரம் காவல் ஆணையர் ரவி நேற்று போக்குவரத்து தலைமை காவலரை நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார். அப்போது, அவரது பணி காவல் துறைக்கே பெருமை சேர்க்கும் விதமாக இருப்பதாகவும், தொடர்ந்து இதேபோன்று செயல்படவும் அறிவுறுத்தினார்.



Tags : Tambaram , Walking barefoot in the sun Police record of buying shoes for grandmother: Tambaram Commissioner praised
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதி...