திருச்சி: பட்டா எண்ணை மாற்ற விவசாயியிடம் ₹1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது செய்யப்பட்டார்.திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த பெத்துப்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி (48). விவசாயியான இவர், சொந்த வீட்டின் பட்டா திருப்பதி, தாய் தவசி, தம்பி தனபால் ஆகியோர் பெயரில் உள்ளது.
இதை ஒரே பெயரில் மாற்றுவதற்காக பட்டா எண் மாற்றிக்கேட்டு வடக்குவெளி விஏஓ நவநீதனை அணுகியுள்ளார். அவர் ₹1000 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் திருப்பதி நேற்றுமுன்தினம் புகார் அளித்தார். போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய ₹1000த்தை நேற்று அவர் விஏஓ நவநீதனிடம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஓவை கைது செய்தனர். பின்னர் அவரது வீட்டிலும் தீவிர சோதனை நடத்தினர்.