×

காட்பாடி அருகே காதல் மனைவி கொலையில் அதிர்ச்சி; ‘கள்ளக்காதலை தட்டி கேட்டதால் மனைவியை உயிருடன் புதைத்தேன்’- கணவன் பரபரப்பு வாக்குமூலம்

கே‌.வி.குப்பம்: காட்பாடி அருகே காதல் மனைவி கொலையில் கைதான அவரது கணவன், தனது கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால் உயிரோடு புதைத்து கொன்றேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வடுகன்தாங்கல் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேஷ் (எ) விநாயகம் (24). கூலித்தொழிலாளி. குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்ரஜா (24). இருவரும் வேலூரில் உள்ள தனியார் ஐடிஐயில் படிக்கும்போது காதலித்துள்ளனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தனர். முடினாம்பட்டு பகுதியில் தனியாக வசித்து வந்தனர். தம்பதிக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் விநாயகத்துக்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாம். இதையறிந்த சுப்ரஜா, கேட்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோல் கடந்த ஜனவரி 19ம்தேதியும் தகராறு ஏற்பட்டது. பின்னர் சுப்ரஜா மாயமானார். இதுகுறித்து சுப்ரஜாவின் அத்தை தனலட்சுமி, கே.வி.குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நேற்று விநாயகம், அவரது சகோதரர் விஜய் (21) மற்றும் உறவினரின் மகன் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்தனர். அப்போது சுப்ரஜாவை சரமாரி தாக்கி அருகிலுள்ள சர்க்கார் தோப்பில் உயிருடன் புதைத்து கொன்றது தெரிய வந்தது.

இதையடுத்து சுப்ரஜாவை புதைத்த இடத்திற்கு 3 பேரையும் அழைத்து சென்றனர். அங்கு வருவாய் துறையினர் முன்னிலையில் சடலத்தை நேற்று தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் விநாயகம் உட்பட 3 பேரையும் கைது செய்து காட்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். விநாயகம், விஜய் ஆகியோரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். சிறுவனை செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக ைகதான விநாயகம் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: விநாயகத்துக்கு வேறு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

இதுதொடர்பாக கடந்த ஜனவரி 19ம்‌தேதி விநாயகத்திற்கும், சுப்ரஜாவிற்கும் தகராறு நடந்தது. அப்போது சுப்ரஜா, எனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி உன்ைன காதலித்து திருமணம் செய்த எனக்கு துரோகம் செய்வதா?’ என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விநாயகம், சுப்ரஜாவை சரமாரி தாக்கியுள்ளார். காயமடைந்த சுப்ரஜாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். அதை நம்பி அவரும் சென்றார். ஆனால், சுப்ரஜாவை தீர்த்துக்கட்ட ஏற்கனவே விநாயகம் திட்டமிட்டு, அவரது தம்பி விஜய் மற்றும் உறவினரின் மகனான 18 வயது சிறுவனையும் முடினாம்பட்டு‌ அருகே உள்ள சர்க்கார் தோப்பிற்கு வரவழைத்துள்ளார்.

சுப்ரஜாவை அங்கு அழைத்து சென்று விநாயகம் உட்பட 3 பேரும் சேர்ந்து கைகளால் சரமாரி தாக்கி, கால்களால் எட்டி உதைத்துள்ளனர். இதில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் 3 பேரும் சேர்ந்து குழிதோண்டி சுப்ரஜாவை உயிருடன் புதைத்து கொன்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். மாயமானதாக கருதப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டது 2 மாதங்களுக்கு பிறகு தெரிய வந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Katpadi , Shocked by murder of romantic wife near Katpadi; ‘I buried my wife alive because I heard a fake love knock’ - Husband’s sensational confession
× RELATED வேலூர் காட்பாடி சாலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பால் மக்கள் அவதி