×

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் தேதிகள் அறிவிப்பு

சென்னை: பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. மே மாதம் முதல் வாரத்தில் இருந்து பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன.

இதற்கு முன்பாக பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் மே 2-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்முறைத் தேர்வுக்கான கால அவகாசம் நெருங்கி கொண்டிருப்பதால் தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து பல்வேறு சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் செய்முறைத் தேர்வுகள் விரைந்து முடிப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்து பள்ளிகளிகளும் மேற்கொள்ள வேண்டும் என்றும் மே 2-ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடித்து மே 4-ம் தேதிக்குள் செய்முறை தேர்வு மதிப்பெண்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தேர்வு தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏப்ரல் 4 மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெறும் முதன்மை கல்வி அலுவலக கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Tags : Announcement of Recipe Exam Dates for Class XII Students
× RELATED நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார்...