சென்னை: ஆறுமுகசாமி ஆணையத்துக்கு புதிய செயலாளராக சஷ்டி சுபன் பாபுவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஆறுமுகசாமி ஆணையத்தின் செயலாளராக இருந்த சிவசங்கரன் மருத்துவ விடுப்பில் சென்றதால் புதிய செயலாளர் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைகள் செயலாளர் இல்லாமல் நடந்த நிலையில் புதிய செயலாளராக சஷ்டி சுபன் பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.