சென்னை: வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடசென்னை அனல்மின் நிலைய 2வது அலகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அரசு நிர்ணயித்த ஊதியம், அடையாள அட்டை, அடிப்படை வசதிகள் செய்து தர ஒப்பந்த தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.