சென்னை: ஓமந்தூரார் மருத்துவமனையில் தாய், சேய் நல தொகுப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். நாட்டிலேயே அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக சிசு குறைபாடுகளை கருவிலேயே கண்டறியும் திட்டம் தொடங்கப்படவுள்ளது. கருவுற்ற 3 மாதத்தில் சிசுவின் குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்ய சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.