×

நடிகை பலாத்கார வழக்கு: திலீப்பிடம் இன்று 2வது நாளாக விசாரணை

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் பிரபல நடிகர் திலீப்பிடம் குற்றப்பிரிவு போலீசார் இன்று 2வது நாளாக விசாரணை நடத்துகின்றனர். பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து கொச்சி குற்றப்பிரிவு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று நடிகர் திலீப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். எர்ணாகுளம் ஆலுவாவில் உள்ள போலீஸ் கிளப்பில் வைத்து சுமார் 7 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது.

குற்றப்பிரிவு ஏடிஜிபி ஸ்ரீஜித் தலைமையில் 2 எஸ்பிக்கள் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் போலீசின் பல கேள்விகளுக்கும் தனக்கு எதுவும் தெரியாது என்று திலீப் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் தாங்கள் சேகரித்த கூடுதல் தகவல்களுடன் இன்றும் திலீப்பிடம் விசாரணை நடத்த தீர்மானித்தனர். அதன்படி இன்றும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நேற்று திலீப்பிடம் போலீசார் கூறினர். இதை தொடர்ந்து அவர் இன்று 2வது நாளாக விசாரணைக்கு ஆஜரானார்.

Tags : Dilip , Actress rape case: Dilip is on trial for the 2nd day today
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே நிபந்தனை...