விருதுநகர்: விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேரை 6 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி 7 நாள் விசாரிக்க அனுமதி கோரிய நிலையில் 6 நாட்களுக்கு அனுமதி அளித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.