×

சிறிது தூரம் சென்ற கார் பழுதானது டீசலில் மண்ணெண்ணெய் கலப்படம் என கூறி பெட்ரோல் பங்க் முன் வாடிக்கையாளர் தர்ணா-திருப்பத்தூரில் பரபரப்பு

திருப்பத்தூர் :  டீசலில் மண்ணெண்ணெய் கலப்படம் செய்துள்ளதாக கூறி பெட்ரோல் பங்க்கில் வாடிக்கையாளர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பத்தூர் அடுத்த விசமங்களம் கிராமத்தில் தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று தம்மனூர் பகுதியை சேர்ந்த கமலநாதன் (35) என்பவர் அவரது காருக்கு ₹3 ஆயிரத்துக்கு டீசல் போட்டுள்ளார். சிறிது தூரம் சென்ற கார் பழுது ஆகி வேகம் குறைந்துள்ளது.

செய்வதறியாமல் தவித்த கமலநாதன் மெக்கானிக்கை வரவழைத்து சரி பார்த்துள்ளார்.அப்போது சென்சார் வைத்து பழுது பார்த்தபோது டீசலில் மண்ணெண்ணெய் கலந்து உள்ளதாக மெக்கானிக் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கமல்நாதன் சம்மந்தபட்ட பெட்ரோல் பங்கிற்கு சென்று இதுகுறித்து கேட்டபோது சரியான விளக்கம் கொடுக்க மறுத்து பெட்ரோல் பங்க் நிர்வாகம் கமலநாதனுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

 இதனால் கமலநாதன் மற்றும் அவரது ஆதரவாளர்களோடு உரிய நடவடிக்கை வலியுறுத்தி பெட்ரோல் பங்க் முன் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட நபரை அழைத்து உரிய புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சமரசம் செய்தனர்.
இதையடுத்து அவர் அங்கிருந்து இருந்து சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : Tharna- ,Thirupathur , Tirupati: A customer was involved in a scuffle at a petrol station for allegedly adulterating kerosene in diesel.
× RELATED சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்...