×

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0!: கஞ்சா, குட்கா பொருட்களை விற்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்கள்..போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு..!!

சென்னை: ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 ஏப்ரல் 27ம் தேதி வரை ஒரு மாதத்துக்கு நடத்த போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். டிஜிபி உத்தரவை அடுத்து நேற்று தொடங்கிய ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 ஒரு மாதத்துக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். குட்கா, கஞ்சா கடத்துவோர், பதுக்குவோர், மொத்த கொள்முதல் செய்வோர் மீதும் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி தெரிவித்துள்ளார். கஞ்சா, குட்கா பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை மனநல ஆலோசகரிடம் அனுப்பி மீட்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

கஞ்சா விற்றால் குண்டர் சட்டம்:

கஞ்சா, குட்கா புகையிலை பொருட்களை விற்போர், கொள்முதல் செய்வோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய டிஜிபி உத்தரவிட்டுள்ளார். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே வசிப்போரை கொண்டு ஆய்வாளர் வாட்ஸ்ஆப் குழு உருவாக்கி ரகசிய தகவல் சேகரிக்க வேண்டும். ஆந்திர மாநில கஞ்சா பயிரை அழிக்க அம்மாநில போலீசாருடன் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில் நிலையங்கள், ரயில்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கஞ்சா, குட்காவை பறிமுதல் செய்ய வேண்டும்.

கஞ்சா, குட்கா குற்றவாளிகளை கண்காணிக்கும் பொறுப்பை காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர்களுக்கு அளிக்க வேண்டும். பார்சல் மூலம் மாத்திரை, போதை மருந்து விற்போரை கண்காணிக்க தனிப்படை அமைத்து கைது செய்ய வேண்டும் என்று டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags : DGP ,Silent Babu , Cannabis, Gutka, Tobacco, Thugs, DGP Silent Babu
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...