×

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் மற்றும் ஒரு விசைப்படகை சிறை பிடித்துதது இலங்கை கடற்படை

ராமநாதபுரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் மற்றும் அவர்களின் விசைப்படகை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டு வரும் நிலையில் இன்று மேலும் 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 512 விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியுள்ளனர். இதனை தொடந்து ஒரு விசைப்படகு மற்றும் அதில் இருந்த 4 மீனவர்களை அவர்கள் சிறை பிடித்தனர்.

தற்போது கைது செய்யப்பட்ட மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி தற்போது தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்படும் மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகா வழக்கு பதிவு செய்து, பிற்பகலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் மண்டபம் மீனவர்கள் 16 பேரையும், 2 விசைப்படகுகளையும் இலங்கை சிறைப்படை கைது செய்து இலங்கை சிறையில் அடைந்துள்ளனர். இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் மண்டபம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டம் முடித்து நேற்று மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நேற்று மீன் பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில், இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகு மற்றும் 4 மீனவர்களை சிறைபிடித்தது வேதனை அளிப்ப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்பதே ஒட்டுமொத்த மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.


Tags : Sri Lankan Navy ,Rameswarat ,Kachtivu , Kachchativu, Rameswaram Fishermen, Sri Lanka Navy
× RELATED இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை