×

லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே வண்டிக்காவனூர் கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன்.  இவர், தந்தையின் பெயரில் உள்ள பட்டாவை தனது பெயரில் மாற்றம் பெறுவதற்காக தாமரைப்பாக்கம் அருகே உள்ள மேலக்கொண்டையூர் கிராமத்தில் உள்ள விஏஒவிடம் சான்றிதழ் கேட்டுள்ளார். அதற்கு, விஏஓ சர்வேஸ்வரி(36), சான்றிதழ் கொடுக்க ₹5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என கேட்டதாக தெரிகிறது.    

இதுகுறித்து வாசுதேவன் திருவள்ளூர், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வனிடம் புகார் செய்தார். அதன்பேரில், நேற்று மாலை வாசுதேவன் பட்டா பெயர் மாற்றத்திற்காக ₹5 ஆயிரம் எடுத்துச்சென்று விஏஒவிடம் கொடுத்தார்.  அந்த பணத்தை விஏஒ சர்வேஸ்வரி வாங்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.



Tags : VO , VO arrested for bribery
× RELATED ராணிப்பேட்டை நகரம் பிஞ்சி ஜெயராம்...