×

மார்க்கசகாய ஈஸ்வரர் கோயிலில் ஜூன் 24ல் மகா கும்பாபிஷேகம்.: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னை மதுரவாயல் மார்க்க சகாய ஈஸ்வரர் திருக்கோயில், சென்னை திருமங்கலம் திருமங்கலீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வுக்கு பின்பு அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது:இக்கோயில் சுமார் கி.பி 12ம் நூற்றாண்டை சேர்ந்தது. இக்கோயிலை சுற்றி 12ம் நூற்றாண்டு கல்வெட்டு உள்ளது, கருவறை கருங்கற்கள் பிரித்து கட்டுதல் மற்றும் இதர சன்னதிகள் மராமத்து செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ₹25,53,810 நிதி வழங்கப்பட்டுள்ளது.

கோயிலின் கொடி மரத்தினை பராமரிப்பு செய்யும் திருப்பணிக்காக உபயதாரர் மூலம் ₹8,60,000 நிதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பணிகள் நிறைவு பெற்று ஜூன் 24ம் தேதியில் குடமுழுக்கு நடைபெறும். திருமங்கலம் திருமங்கலீஸ்வரர் கோயிலில் ஆய்வு செய்யப்பட்டது. இத்திருக்கோயிலில் வழக்கு நடந்து கொண்டிருப்பதால், வழக்கினை விரைவில் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.



Tags : Maha Kumbabhishekam ,Margasakaya Eeswarar Temple ,Minister ,BK Sekarbabu , At the Margasakaya Easwarar Temple Maha Kumbabhishekam on June 24: Information by Minister BK Sekarbabu
× RELATED போளூர் அடுத்த வடமாதிமங்கலம்...