×

சார்ஜாவிலிருந்து கடத்தி வந்த 35 லட்சம் தங்க பசை பறிமுதல்: வாலிபர் கைது

சென்னை: சார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானத்தில் நேற்று சென்னை வந்த அரியலூரை சேர்ந்த மகேந்திரன் (28), விமான நிலையத்தை விட்டு கிரீன் சேனல் வழியாக வெளியேற முயன்றார். அவரை சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது தங்க பசை உள்ள 2 டப்பிகளை, ஆசனவாயில் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அதை வெளியே எடுத்து, மதிப்பிட்டதில் ₹35  லட்சம் மதிப்பிலான 723 கிராம் தங்கப்பசை இருந்தது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்து மகேந்திரனை கைது செய்து விசாரிக்கின்றனர். 


Tags : Sharjah , 35 lakh gold glue smuggled from Sharjah seized
× RELATED ரஷித் கான் சுழலில் மூழ்கியது அயர்லாந்து