×

134வது மாரத்தானை பாட்னாவில் நிறைவு செய்த அமைச்சர்

சென்னை: இளைஞர்களுக்கான உடற்பயிற்சி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்ந்து பல்வேறு மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில்  பீகார் மாநிலம் பாட்னாவில்  நேற்று  அதிகாலை தொடங்கி நடைபெற்ற மாரத்தானில் பங்கேற்று, தன்னுடைய 134வது மாரத்தான் 21.1 கி.மீ. தூரத்தை 2 மணிநேரம் 30 நிமிடங்களில் ஓடி நிறைவு செய்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் லண்டன் மெய்நிகர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன் 21 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி நேரம் 8 நிமிடங்களில் நிறைவுசெய்து பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Minister ,134th Marathon ,Patna , Minister completes 134th Marathon in Patna
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!