×

திருமாவளவன் அறிவிப்பு பொது வேலை நிறுத்தத்தில் விசிக பங்கேற்கும்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கையான தனியார்மயக் கொள்கையை கண்டித்து மார்ச் 28, 29 ஆகிய இருநாட்கள் நாடு முழுவதும் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. நாடு முழுவதும் இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராக நடக்கின்ற பொது வேலைநிறுத்த போராட்டத்தில் விசிகவினர் பங்கேற்பார்கள். விசிக தொழிலாளர் விடுதலை முன்னணி மற்றும் அரசு ஊழியர் ஐக்கிய பேரவையினர் பங்கேற்பார்கள் என தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Thirumavalavan ,Vizika , Thirumavalavan announcement Vizika will participate in the general strike
× RELATED தினமும் பொய் பேசும் அரசியல் காமெடியன் அண்ணாமலை: திருமாவளவன் விளாசல்