×

தோனியின் அரை சதத்துடன் கோலாகலமாக தொடங்கிய ஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு 132 ரன்கள் நிர்ணயம் செய்தது சென்னை அணி

மும்பை: 2022- ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ரன் எதுவும் இன்றி ஆட்டமிழந்தார். கான்வேயும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். உத்தப்பா 28 ரன்களில் வருண்சக்கரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார்.

அம்பத்தி ராயுடு 15 ரன்களில் ரன் அவுட் ஆனார். ஷிவம் துபே 3 ரன்களில் வெளியேறினார். சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 131  ரன்கள் எடுத்துள்ளது.  டோனி  38  பந்துகளில்  50  ரன்களுடனும் ஜடேஜா  28 பந்துகளில் 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  இதையடுத்து 132 வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்துவருகிறது. 132 ரன்களை நிர்ணயமாக கொண்டு கொல்கத்தா அணி தற்போது விளையாடி வருகிறது.



Tags : IPL ,Toni ,Kolkata ,Chennai , Dhoni, with half a century, IPL, T20
× RELATED முதலிடத்தை தொடருமா கேகேஆர்: மூட்டை கட்டிய மும்பையுடன் மோதல்