களக்காடு: களக்காடு தோப்பு தெருவை சேர்ந்தவர் சிதம்பரம். இவர் நகர இந்து முன்னணி தலைவராக உள்ளார். சிதம்பரம் வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். இதில் ஒரு ஆடு அங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள மணியை அடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோயில் மணி கயிற்றால் தூணில் கட்டப்பட்டுள்ளது. ஆடு அந்த கயிற்றை தலையால் மோதியும் காலால், இழுத்தும் மணியை அடிக்கும் காட்சியை பார்த்து பலர் வியப்பு அடைந்து வருகின்றனர்.