×

இலுப்பூர் காவல் நிலையத்துக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் காவல் நிலையத்திற்குள் நேற்று மதியம் சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் இலுப்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான வீரர்கள் காவல் நிலையம் வந்து சுமார் ஒருமணி நேரம் போராடி, ஆவணங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்த பீரோவிற்கு பின்புறம் இருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர்.

பின்னர் அதை பிளாஸ்டிக் சாக்கு பையில் அடைத்து அப்பகுதி காட்டில் விட்டனர். விஷப்பாம்பு பிடிக்கப்பட்டதை அடுத்து காவலர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.இதேபோல் இலுப்பூரில் குடியிருப்பு பகுதியில் கட்டிட வேலைகளுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கல் கற்களுக்குள் பாம்பு புகுந்தது. தீயணைப்பு வீரர்கள் இந்த பாம்பையும் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

Tags : Pampal ,Iluppur police station , Iluppur police, inside the station, snake busting
× RELATED சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி...