×

ரூ.1.15 கோடி மதிப்புடைய 1.8 கிலோ தங்கம், மின்சாதனம் பறிமுதல்: சார்ஜா, துபாயில் இருந்து கடத்தி வந்த 2 பேர் கைது

மீனம்பாக்கம்: சார்ஜா, துபாய் நாடுகளில் இருந்து சென்னை வந்த விமானங்களில் ரூ.1.15 கோடி மதிப்புடைய 1.8 கிலோ தங்கம் மற்றும் மின்னணு சாதனங்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த 32 வயது ஆண் பயணி, ‘என்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை’ என்று கூறிவிட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அவரை அழைத்து சூட்கேசை சோதனையிட்டனர். அதில் மறைத்து வைத்திருந்த மின்னணு சாதனங்களை கைப்பற்றினர். மேலும் அதற்குள் 300 கிராம் எடையுடைய தங்க கட்டி மறைத்து வைத்திருந்ததையும் கண்டுபிடித்தனர். மதிப்பு ரூ.15 லட்சம். மின்னணு சாதன பொருட்களின் மதிப்பு ரூ.26 லட்சம். இதையடுத்து ரூ.41 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம், மின்னணு சாதனப்பொருட்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
* துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த வாலிபர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரை நிறுத்தி சோதனையிட்டபோது, உடமைகளில் எதுவும் இல்லை. சந்தேகம் தீராததால் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். உள்ளாடைக்குள் 2 பார்சல்கள் மறைத்து வைத்திருந்தார். அதை எடுத்து பிரித்து பார்த்தபோது தங்க பசை இருந்தது. மதிப்பு ரூ.74 லட்சம். தங்கப்பசையை பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.

Tags : Sharjah, Dubai , 1.15 crore, 1.8 kg gold, electricity, confiscated
× RELATED துபாய், ஷார்ஜாவில் இருந்து...