×

உதகை அருகே தனது தவறான உறவுக்கு இடையூறாக இருந்த 1 வயது குழந்தை கொடூரமாக கொலை செய்த தாய் கைது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் தனது தவறான உறவுக்கு இடையூறாக இருந்த 1 வயது குழந்தை கொடூரமாக கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி கீதா ஆகியோருக்கு இரு மகன்கள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கீதா கார்த்திக்கை விட்டு பிரிந்து தனது ஒரு வயது மகனுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 15-ம் தேதி கீதாவின் 1 வயது மகன் திடீரென உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது சம்பந்தமாக பெறப்பட்ட புகாரில் உதகை காவல்துறையினர் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து பிரேதபரிசோதனை செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். பிரேதபரிசோதனை ஆய்வு அறிக்கையில் குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக உணவு ஊட்டி மதுபானம் கொடுத்துள்ளதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து கீதாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது குழந்தையை சரியாக பராமரிக்காமல் அதிக அளவு மது கொடுத்ததும், அதிக அளவு உணவு ஊட்டியும் மூச்சுத்திணற வைத்து கொன்றதாக ஒப்புக்கொண்டார். இந்நிலையில் கீதா போலீசாரால் கைது செய்யப்பட்டார். கீதா தனது இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு கார்த்திக்கை திருமணம் செய்ததும் மேலும் இவருக்கு பலருடன் பழக்கம் இருந்ததால் கார்த்திக்கை விட்டு பிரிந்து தனது ஒரு வயது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கீதாவுக்கு பலருடன் தொடர்பு இருந்ததால் குழந்தை இடையூறாக இருந்துள்ளது. இதனால் அதிக அளவு மது கொடுத்ததும், அதிக அளவு உணவு ஊட்டியும் மூச்சுத்திணற வைத்து கொடூரமாக கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து உதகை போலீசார் கீதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.                


Tags : Udagai , Arrest of mother who brutally murdered 1-year-old child who was interfering with her abusive relationship near Udagai
× RELATED உதகையில் மண்சரிவு ஏற்பட்டு தொழிலாளர்...