நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை உதகை நீதிமன்றம் ஏப்.23க்கு ஒத்திவைத்தது. வழக்கில் இதுவரை 202 பேரிடம் தனிப்படை விசாரணை நடத்தி உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வழக்கு குறித்து பல்வேறு ஆதாரங்கள் திரட்டி உள்ளதால் கூடுதல் விசாரணையை முடிக்க அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.