×

ஆன்லைன் மூலம் பதிவு செய்தால் இல்லம் தேடி வரும் தமிழரசு இதழ்: கலெக்டர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர்: ஆன் லைன் மூலம் பதிவு செய்தால் இல்லம் தேடி வரும் தமிழரசு இதழ் சேவையை திருவள்ளூர் கலெக்டர் துவக்கி வைத்தார். திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு இ சேவை மையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வெளியிடப்படும் தமிழரசு மாத இதழை அனைத்து தரப்பு மக்களும் எளிதில் பெற்று பயன்பெறும் வகையில் ஆன் லைன் மூலம் பதிவு செய்தால் இல்லம் தேடி வரும் தமிழரசு இதழ் சேவை துவங்கப்பட்டது.
இதனை, கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார். பின்னர், இ சேவை மையம் வாயிலாக பதிவு செய்தவர்களுக்கு ஒப்புகை சீட்டுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது. தமிழக முதல்வரின் அறிவிப்புகள், உரைகள், நிகழ்ச்சிகள் அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அரசாணைகள் ஆகியவற்றை முழுமையாகப் பொதுமக்கள் அறிந்து பயனடைய அரசு இ சேவை மையங்களில் தங்கள் பெயர் மற்றும் முகவரி விவரங்களை தெரிவித்து, பதிவு செய்து தமிழரசு இதழை அஞ்சல் வாயிலாக பெற்று பயனடையலாம் என்றார். இதில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கூ.பாபு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tamilarasu Magazine: Collector launches home search if you register online
× RELATED தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு...