வங்கதேச கிரிக்கெட் அணி தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இருஅணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்தொடரில் முதல் போட்டியில் வங்கதேசமும், 2வதுபோட்டியில் தென்ஆப்ரிக்காவும் வெற்றிபெற்றன. இந்நிலையில் தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று செஞ்சூரியனில் நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
தவானுக்கு தான் இந்த முறை ஆரஞ்ச் தொப்பி ஐபிஎல் 15வது சீசன் தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அதன்பரபரப்பு தற்போதே தொற்றிக்கொண்டுள்ளது.
இந்நிலையில் நடப்பு சீசனில் பஞ்சாப் தொடக்க வீரர் ஷிகர் தவான் தான், அதிக ரன் குவித்த வீரருக்கான ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றுவார் என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். கே.எல். ராகுல், ரோகித் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இருந்தபோதிலும், தவானுக்கு தான் அந்த வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.