×

பிரியாணி விருந்தில் கறி கம்மியாக வைத்ததில் தகராறு வாலிபர் கத்தியால் குத்தி கொலை

திருமலை: ஆந்திர மாநிலம், கடப்பாவை சேர்ந்தவர்கள் ஷேர்கான், சிவா. நண்பர்கள். ஷேர்கானின் உறவினர் வீட்டில் விருந்து ஒன்று கடந்த 13ம்தேதி நடந்தது. இதில் ஷேர்கானும், சிவாவும் பங்கேற்றனர். அப்போது பிரியாணி பரிமாறப்பட்டது. இதில் சிவாவுக்கு ஷேர்கான், மட்டன் பீஸ் குறைவாக வைத்தாராம். இதனால் ஆத்திரமடைந்த சிவா, ஷேர்கானிடம் சண்டை போட்டுள்ளார்.

இருவரையும் அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அன்றிரவு இருவரும் சந்தித்தபோதும் மட்டன் பீஸ் கம்மியாக வைத்தது குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிவா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷேர்கானை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து கடப்பா போலீசில் ஷேர்கான் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ஷேர்கான் தனது நண்பர்கள் உதவியுடன் சிவாவை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி கடந்த 19ம்தேதி தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த சிவாவை, ஷேர்கானின் நண்பர்களான அகமது, ஜப்பார்கான் ஆகியோர் சமாதானம் பேசலாம் என்று கூறி அழைத்து சென்றனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றபோது 3 பேரும் சேர்ந்து சிவாவை கத்தியால் சரமாரி குத்தி கொலை செய்துள்ளனர். பின்னர், சடலத்தை ஆட்டோவில் ஏற்றிச்சென்று அருகே மறைவான இடத்தில் வீசிவிட்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் கடப்பா போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளிகள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் சடலத்தை கொண்டு சென்ற ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Tags : walibur ,Biryani , Biryani, curry gummi, dispute, youth, stabbing
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணி...