×

ஜெயலலிதா இறப்பதற்கு முன் நான் உள்பட 3 அமைச்சர்கள் பார்த்தோம்: ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்

சென்னை: டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா இறப்பதற்கு முன் அவரை நான் உள்பட 3 அமைச்சர்கள் பார்த்தோம் என ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார். முதல் நாள் விசாரணையின் போது ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்று கூறியிருந்த ஓபிஎஸ் நேரில் பார்த்ததாக இன்று கூறியுள்ளார். எக்மோ பொருத்தப்பட்டது தொடர்பாக அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் தெரிவித்தார். டிசம்பர் 4ம் தேதி ஆளுநர் அப்போலோ மருத்துவமனை வந்திருந்தும் ஜெயலலிதாவை சந்திக்காமல், அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டியை மட்டும் சந்தித்தது குறித்து தனக்கு நினைவில்லை என்றும் ஓ.பி.எஸ். வாக்குமூலம் அளித்துள்ளார்.


Tags : Jayalalitha ,O. ,Pannerselvam , Before Jayalalithaa died we saw 3 ministers including myself: O. Panneerselvam confession
× RELATED மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம் வீரப்பன்(98) காலமானார்