சென்னை: விளாத்திகுளம் வருவாய் வட்டத்தைப் பிரித்து, புதூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்க வேண்டும் என விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கோரிக்கை விடுத்தார். அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தும், முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஆனைமலை வருவாய் கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.