சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா மீது சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்திருப்பதா? என புகார் மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ரவுடிகள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இது ரவுடிகளை ஊக்கப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.