×

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் தக்காளி சேமிக்க குளிர்பதன கிடங்குகள்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் தான் மிக அதிக பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. தக்காளி விலை வீழ்ச்சியடைவதையும், உயர்வதையும் தடுக்க இந்த மாவட்டங்களில் குளிர்பதனக் கிடங்குகளை அமைக்க வேண்டும்; தக்காளியிலிருந்து சாஸ் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிப்பதற்கான சிறப்பு மண்டலங்களை அமைக்க வேண்டும். தக்காளி விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் தக்காளி சேமிக்க குளிர்பதன கிடங்குகள்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் தான் மிக அதிக பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. தக்காளி விலை வீழ்ச்சியடைவதையும், உயர்வதையும் தடுக்க இந்த மாவட்டங்களில் குளிர்பதனக் கிடங்குகளை அமைக்க வேண்டும்; தக்காளியிலிருந்து சாஸ் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிப்பதற்கான சிறப்பு மண்டலங்களை அமைக்க வேண்டும். தக்காளி விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Krishnagiri ,Darmapuri ,Ramadas , Refrigerated warehouses for storing tomatoes in Krishnagiri and Dharmapuri districts: Ramadas request
× RELATED வறட்சியால் பாதிக்கப்பட்ட மாமரங்கள் கணக்கெடுப்பு