சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மேகதாதுவில் அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கி கர்நாடக அரசு பணிகளை தொடங்கிவிட்ட பிறகு, ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் அதிக எம்.பி.க்களை வைத்திருக்கிறதோடு தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தையும் வைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகதாதுவில் அணையை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.